Thursday, April 1, 2010

எதுவும் புதிதில்லை.

முதன் முறையாக தன்னிடம் வந்த மாணவன் ஷிய்டோவினை சோதித்துப் பார்க்க விரும்பினார் சா'ன் ஆசிரியர் சிங் யூவான். "நீ ஆசிரியர் ஹூய் நெங்கின் சீடனல்லவா? ஆசிரியரிடம் கல்வி கற்பதற்கு முன்பு உன்னிடம் இல்லாத ஒன்றை புதிதாத ஆசிரியர் ஹூய் நெங் சொல்லிக் கொடுத்தாரா?" என்று ஷிய்டோவினைப் பார்த்துக் கேட்டார் சிங் யூவான்.

"ஆசிரியரிடம் நான் கற்றுக் கொள்ளுவதற்கு முன்பும் அதன் பின்பும் என்னிடம் இல்லாத எந்த ஒன்றும் புதிதாக என்னிடம் சேரவில்லை" என்றான் பணிவுடன் மாணவன் ஷிய்டோ.

ஆனால் விடாக்கண்டனான சா'ன் ஆசிரியர் சிங் யூவான், "ஆசிரியருடைய போதனைகளினால் புதிதாக எதுவுமே நீ பெற வில்லை என்றால் எதற்காக இத்தனை வருடங்கள் அவரிடம் பயின்றாய்?" என்று இன்னொரு கேள்வியை அவன் முன் வைத்தார்.

"நான் அவரிடம் படித்ததினாலேயே தான் எனக்கு, 'என்னிடம் கல்வி கற்பதற்கு முன்பும், பின்பும் எதுவும் புதிதாக சேரவில்லை' என்பது தெரிந்தது. அதற்காகத் தான் இத்தனை வருடங்கள் எடுத்துக் கொண்டேன்" என்றான்.

No comments:

Post a Comment