Thursday, April 1, 2010

சமதள சூத்திரம்

மடத்திலிருந்த இளைய துறவி "சமதள சூத்திரம்" என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த போது திடிரென ஒரு சந்தேகம் வந்து, மடத்தின் மூத்த துறவியை பார்த்து, "குருவே, தியானத்தில் இருக்கும் போது உங்களால் பார்க்க முடியுமா? முடியாதா?" என்று கேட்டார்.
தன் கையிலிருந்த கோலால் மூத்த துறவி இளைய துறவியை மூன்று முறை பலமாக அடித்த பின்பு, "நான் அடித்த போது வலித்ததா? வலிக்கவில்லையா?" என்று கேட்டார்.
இளையவர்: "வலிக்கவும் செய்தது, வலிக்காமலும் இருந்தது."
முதியவர்: "பார்க்கவும் முடிந்தது, பாராமலும் இருந்தது"
இளையவர்: "எப்படி உங்களால் ஒரே சமத்தில் பார்த்தும், பார்க்காமலும் இருக்க முடியும்?"
முதியவர்: "உள் மன எண்ணங்களையும், அதன் ஓட்டங்களையும் என்னால் பார்க்க முடிந்தது, வெளி உலகின் அழகையும், மனிதர்களில் யார் நல்லவர், கெட்டவர், நடந்தவைகளில் எது நல்லது, கெட்டது என்பதை என்னால் பார்க்க முடிய வில்லை" என்றார்.

No comments:

Post a Comment