Thursday, April 1, 2010

முஷ்டியை உயர்த்து

டாம்பாவில் இருந்த ஒரு கோயிலில் மொகுஸென் ஹிகி தலைமைக் குருவாக இருந்தார். அவருடைய கோயிலிற்கு வரும் தொண்டர்களில் ஒருவன் தன்னுடைய மனைவியின் கஞ்சத் தனத்தைப் பற்றி அவரிடம் கூறி மிகவும் கவலைப் பட்டுக் கொண்டான்.

மொகுஸென் அடியவரின் வீட்டிற்கு வருகை தந்தார். அவனுடைய மனைவியைப் பார்த்ததும், தன்னுடைய முஷ்டியை உயர்த்தி அவளுடைய முகத்திற்கு நேராக காட்டினார்.

அதைப் பார்த்து வியந்த அவள், "என்ன சொல்ல வருகிறிர்கள்?, எனக்கு ஒன்றும் புரிய வில்லை" என்றாள்.

"ஒரு உதாரணத்திற்காக எனது விரல்கள் அனைத்தும் எப்பொழுதும் இப்படியே மூடி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படி இருக்கும் விரல்களை நீ என்னவென்று கூறுவாய்?" என்று கேட்டார்.

"ஒழுங்கற்ற ஊனமான விரல்கள் என்றுக் கூறுவேன்" என்றாள் அந்தப் பெண்.

தன்னுடைய கையை நன்றாக பரந்து தட்டையாக விரித்தவர், அவளுடைய முகத்தைப் பார்த்து, "எப்பொழுதும் இந்த விரல்கள் இப்படியே இருந்தால் என்ன நினைப்பாய்" என்றார்.

அந்த அடியவரின் மனைவி "இதுவும் ஒருவகையான ஊனமே" என்று பதில் கூறினாள்.

"இந்த அளவிற்கு நீ புரிந்து கொள்ள முடிந்தது என்றால்" என்று சொல்லி நிறுத்தி அவளுடைய கண்களைப் பார்த்து "நீ நல்ல மனைவிதான்" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

அதன் பிறகு அந்த அடியவரின் மனைவி கனவனுடன் சேர்ந்து சேமிக்கவும் அதே சமயத்தில் தேவையானவற்றிற்கு முறையாக அளவிற்கு செலவு செய்யவும் ஆரம்பித்தாள்.

No comments:

Post a Comment