Thursday, April 1, 2010

சுகமானது பன்றி வாழ்வு

ஒரு ஸென் துறவிக்கு திடிரென ஒரு நாள் அடுத்த பிறவியை பற்றிய ஞானோதயம் கிடைத்தது. உடனே அவர் தன்னுடைய சீடரை அழைத்து எனக்கு ஒரு உதவி செய்ய மறுக்காமல் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று கெஞ்சினார்.
"நீங்க எது சொன்னாலும், நான் செய்கிறேன் குருவே" என்று சீடன் பதில் கூறினான்.
"எனது அடுத்த பிறவியில் நான் பன்றியாக பிறப்பேன். நமது வீட்டு பெண் பன்றி நான் இறந்ததும், குட்டிகள் போடும், அதில் நான் நான்காவது குட்டி, எனது வலது கண்ணுக்கு மேலே உள்ள நெற்றியில் ஒரு குறி இருக்கும், அதனை வைத்து நீ அடையாளம் தெரிந்து கொள்ளலாம், அந்த குட்டியை நீ உடனடியாக கொல்ல வேண்டும்!" என்று கூறினார்.
ஒரு வருடத்துக்குள், ஸென் துறவி இவ்வுலக வாழ்வை நீத்தார், அவர் கூறிய படியே பெண் பன்றி குட்டிகளை ஈன்று எடுத்தது. சீடன் கத்தியை நன்றாக தீட்டிக் கொண்டு அந்த நான்காவது குட்டியிடம் சென்றார். "நிறுத்து! என்னைக் கொல்லாதே" என்று அந்த பன்றிக் குட்டி அலறியது.
கத்தியை கிழே போட்ட சீடன் அச்சரியத்துடன் அந்த குட்டியை பார்த்தான்.
"நான் உன்னை மாதிரி இருந்த போது பன்றியின் வாழ்வு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. இந்த வாழ்வு மிகவும் சுகமாக இருக்கிறது. அதணால் இப்படியே இருந்து விடுகிறேன்".

No comments:

Post a Comment