Thursday, April 1, 2010

கற்பாலம்

இன்றைய கோஆன் மிகவும் புகழ் பெற்றது. இது சாவோ சாவ் என்ற நகரத்தில் வாழ்ந்த என்பது வயதான சவோ சாவிற்கும் (ஊரின் பெயரே ஸென் குருவின் பெயராகி விட்டது. இந்தியாவில் கூட ஊரின் பெயரே புகழ் பெற்றவர்களின் பெயர் ஆகிவிடுவதுண்டு. நாளடைவில் புகழ் பெற்றவர் ஊர் பெயராலேயே அழைக்கப் படுவது வழக்கம்.) அந்த ஊருக்கு புதிதாக வந்த துறவி ஒருவருக்கும் நடந்த உரையாடலாகும்.

குரு சாவோ சாவிடம் வந்த துறவி ஒருவர், "வெகு நாட்களுக்கு முன்பிருந்தே சாவோ சாவிலிருக்கும் புகழ் பெற்ற கற்பாலத்தினைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன், ஆனால் இங்கு வந்த பின்பு நான் பார்ப்பது என்னவோ வெறும் சாதரண மரப்பாலம்தான்" என்றார்.

சவோ "மரப்பாலத்தினை மட்டும் தான் உங்களால் பார்க்க முடிகிறது; ஆனால் கற்பாலம் இருப்பதை உங்களால் பார்க்க முடியவில்லை" என்று பதிலுரைத்தார்.

துறவி, "கற்பாலமா என்ன?"

சவோ, "கழுதைகளையும் கடக்க வைக்கிறது, குதிரைகளையும் கடக்க வைக்கிறது".

No comments:

Post a Comment