Thursday, April 1, 2010

கங்கையை கடக்க எளிய வழி

இளவரசராக இருந்த கௌதமர், ஞானம் பெற்று புத்தராக மாறிய பின்பு தன்னை பின்பற்றி நடக்கும் சீடன் ஒருவன் கங்கையின் கரையில் உள்ள மரத்தடியில் அமர்ந்து வெகு தீவிரமாக தியானம் செய்வதை பார்த்தார். அவனிடம் சென்ற புத்தர் "எதை அடைவதற்காக இவ்வளவு ஆழ்ந்த முயற்சியுடன் தியானம் செய்கிறாய்?" எனக் கேட்டார். அதற்கு சீடன் "எந்த கடினமும் இல்லாமல் இந்த கங்கையின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு செல்ல வேண்டும், அதற்கான ஆற்றலை பெறுவதற்காகவே நான் தியானம் செய்கிறேன்" என்று கூறினான். புத்தர் சில நாணயங்களை அவனிடம் கொடுத்து "ஒரு நல்ல படகு ஓட்டியிடம் உன்னுடைய தேவையை கூறு, அவன் எளிதில் உனக்கு தேவையான வழி காட்டுவான்" என்று கூறினார்.

No comments:

Post a Comment