Thursday, April 1, 2010

"கிறித்தவ மதத்தை மட்டும் ஏன் குறிப்பாக தாக்குகிறீர்கள் “

கிறித்தவ மதத்தை மட்டும் ஏன் குறிப்பாக தாக்குகிறீர்கள் “என்று கேட்கிறீர்கள் ,அதற்க்கு முக்கிய காரணம் ,நான் அவர்கள் மேல் வைத்திருக்கும் உண்மையான அன்புதான் .அவர் “அன்பே கடவுள் “என்றார் . அந்த அன்பு வடிவத்தையே நான் கடவுளாக காணுகிறேன் .அந்த யதார்த்தமான ,உண்மையான தைரியமான தன்னை யார் என்று உணர்த்துக் கொண்ட ஒரு குருவை .சிலுவையில் அறைந்து ,சிலையாக வடித்து அவர்பெயரில் ஒரு மதத்தை உண்டாக்கிக் கொண்டு பணத்தை வாரி இறைத்து ,கிறித்துவத்தையும் ,கிறித்துவ மதத்தையும் சரியாக புரிந்துக் கொள்ளாமலேயே ,இந்த உலகத்தில் பரப்புவது எந்த விதத்தில் நியாயம் ?
ஒன்று மட்டும் கூறிக் கொள்ளுகிறேன் .நான் எந்த மதத்தையும் சேராதவன் . எனக்கு என்று எந்த மதமும் கிடையாது , மதம் என்ற குறுகிய எல்லைக்குள் ,என்னை அடைத்துக் கொள்ள நான் ஒரு நாளும் விரும்ப மாடேன் .என்னுடைய மதம் மதமற்ற மதம்( Religion without any religion ) நான் எல்லா மதத்துக்கும் உடையவன் .நான் ஒரு உண்மையான கிருத்துவனை விட ,இந்துவை விட ,முகமதியரை விட ,ஜைனரை விட எந்தவிதத்திலும் குறைத்தவன் இல்லை .இதை முதலில் புரிந்துக்கொள்ளுங்கள் .ஆகவே எந்த ஒரு உண்மையான ,கிருஸ்துவை உண்மையாக புரிந்துக்கொண்ட யாருடைய மனத்தையும் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல .குறிக்கோளும் இல்லை .தேவையும் இல்லை .அப்படி அவர்களுடைய மனதை புண்படுத்தினால் ,என்னுடைய மனதையே ,நானே புண்படுத்தி கொள்வதற்கு சமம் .என்னை சரியாக புரிந்துக்கொள்ளுங்கள்.

ஒரு கேள்வி ஓராயிரம் கேள்விகளை உண்டுபண்ணும் .அது உண்மைதான் .இப்போது நம்மால் கிறிஸ்துவையும் ,கிறிஸ்துவ மதத்தையும் தாண்டி இன்னும் செல்ல முடியவில்லை .
ஆமாம் ,”நீங்கள் சொல்லுவது உண்மைதான் .இந்து மதத்தை தோண்ட தோண்ட ……!எதுவோ சொல்லுவார்கள் . அதற்க்கு இந்த புத்தகம் போதாது.இப்படி பல மதங்களில்
பல மூட நம்பிக்கைகள் ஊடுரிவி தான் இருக்கும் .நம்மவர்கள் கடவுளை நம்புங்கள் என்றுதான் அழுத்தமாக சொல்லி இருக்கிறார்கள் தவிர “கடவுளை அடையுங்கள்” “கடவுளை அறிந்துக் கொள்ளுங்கள் ” “கடவுளை உணர்ந்துக் கொள்ளுங்கள் “என்று சொல்லவில்லை .நீங்கள் ஒன்றை அறிந்திக் கொள்ளாத பொழுது ,உணர்த்துக் கொள்ளாத பொழுது தான் “நம்புதல் ” என்று வருகிறது .நம்புதலுக்கு அடித்தளம் மூடக்கொள்கை ,மற்றும் பொய் ,பயம் ,ஆசை இவை தான் .
அதை போலத்தான் ஜீசஸ் யை நம்புங்கள் என்று பிரச்சாரம் செய்கிறார்களேத் தவிர ஜீசஸ்யை உண்மையாக புரிந்துக் கொண்டு ,உணர்ந்துக் கொண்டு நம்புங்கள் என்று எந்த பாதிரிமாரும் பிரச்சாரம் செய்வது இல்லை .ஏன் என்றால் அவர்களே ஜீசஸ் யை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை .இதனால் , ” என்னை சாப்பிடுங்கள் ,என்னை குடியுங்கள் ” என்று ஜீசஸ் சொன்னதற்க்காக இன்றைக்கு ஆப்பத்தையும் ,ஓய்ன் என்ற மதுபானத்தையும் சாப்பிட்டுக் கொண்டு ஆனந்தமாக ஆடுகிறார்கள் .ஆகவே நம்புதல் என்பது ஒருவர் புரிந்துக் கொண்டதால் தானே வரவேண்டும் .தவிர வெறும் நம்பிக்கை மூடநம்பிக்கைகளை மட்டும் வளர்க்கும் .

No comments:

Post a Comment