Thursday, April 1, 2010

தவளைக்கறி

சைனாவின் கிராமத்தில் இருந்த ஒரு விவசாயி, பக்கத்திலிருந்த நகரத்திலிருந்த ஒரு சிற்றுண்டி உணவகத்திற்கு சென்று அந்த உணவகத்தின் உரிமையாளரை சந்தித்தான். அந்த ஒட்டல் உரிமையாளரிடம் "இலட்சம் தவக்களையின் கால்கள் வேண்டுமா?" என்றுக் கேட்டான். உரிமையாளர் அந்த விவசாயியைப் பார்த்து வியந்து "இலட்சம் தவளையின் கால்கள் உனக்கு எப்படி கிடைக்கும்?" என்றுக் கேட்டான்.

விவசாயி ஒட்டல் உரிமையாரிடம், "என்னுடைய வீட்டிற்கு அருகே உள்ள குட்டை நிறைய தவக்களைகள் உள்ளன. இலட்சக் கணக்கில் இருக்கும் என்று நினைக்கிறேன். இரவு முழுவதும் அந்த தவளைகளின் கத்தும் சத்தம் காதைப் பிளக்கிறது. அதணால் அங்கிருந்து பிடித்துக் கொண்டு வந்து தருகிறேன்" என்றான்.

உரிமையாளர் "ஓ! அப்படியா சேதி, அடுத்த வாரத்திலிருந்து தினம் 100 தவளைகள் வீதம் வாரத்திற்கு 700 தவளைகளை பிடித்துக் கொண்டு வந்து தா, அதற்கு தகுந்த பணம் உனக்கு கொடுக்கப் படும். ஒரு மாதம் கழித்து 200 தவளைகள் வீதம் பிடித்துக் கொண்டு வருவதற்கும் இப்பொழுதே ஒப்பந்தம் போடுகிறேன்" என்று கூறி விவசாயியிடம் ஒப்பந்தம் செய்து கொண்டான்.

அடுத்த வாரம் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு அசட்டுப் புன்னகையுடன் வந்த விவசாயி ஒட்டல் உரிமையாரிடம் இரண்டு குட்டி தவக்களைகளை காண்பித்தான். சிற்றுண்டி உரிமையாளர் விவசாயியைப் பார்த்து "ஆமாம், எங்கே மற்ற தவளைகள், இரண்டே இரண்டை மட்டும் என்னிடம் காட்டுகிறாய்" என்றார். விவசாயி அசட்டு புன்னகையுடன் "ஒரு பெரிய தவறு நிகழ்ந்து விட்டது. அந்தக் குட்டையில் இந்த இரண்டு தவளைகள் மட்டுமே இருந்தன. ஆனால் இவை போட்ட சத்தம் ஊருக்கே கேட்கும் அளவிற்கு இருந்தது" என்றான்.
(சில சமயங்களில் நம்மை சுற்றியுள்ளவர்களின் புண்படுத்தும் படியான பேச்சுக்கள், ஏச்சுக்கள், துன்பம் கொடுக்கும் செயல்கள் அளவில சிறியதாக இருந்தாலும், நமது எண்ணங்கள் மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று எப்பொழுதும் மற்றவர்களின் விமர்சன பார்வையில் நமது தோற்றம், நடவடிக்கை சரியாக இருக்கிறதா என்று எண்ணி அதனை சரிபடுத்தவதற்கோ (அ) அதனைப் பற்றி நினைத்து மனம் வருந்தியோ நமது பொன்னான நேரத்தினை சில நேரங்களில் தூக்கமின்றி செலவழிக்கிறோம். அதனை தவிர்த்து நன்றாக தூங்கி எழுந்து மற்றவர்களின் விமர்சனங்கள் நம்மை எந்த அளவில் பாதிக்கிறது. அவை உண்மையிலேயே நம் மீதுள்ள குறைபாடா (அ) நம்மை பற்றி கேளி செய்வதற்காக சொல்லப் பட்டதா என்று உற்று நோக்கினால், பல விஷயங்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

இந்தக் கதையில் விவசாயி இரவு முழுவதும் தூங்க முடியாமல் தவிக்கிறான். அந்தக் குட்டையை போய் எட்டிக் கூட பார்க்காமல் இலட்சத்திற்கு மேல் தவளைகள் இருக்கும் என்று எண்ணுகிறான். ஆனால் உண்மையில் அந்தக் குட்டையில் இருந்ததோ இரண்டு தவளைகள் தான் என்று கண்டு பிடித்த போது அசட்டுத் தனமான தன்னுடைய முந்தைய எண்ணத்தை நினைத்து வருத்தப் படுகிறான். துன்பமும் அதைப் போல தான் எட்டி நின்று பார்க்கும் போது பெரிய பூதகரமான விஷயமாக தோன்றும், அதனுடைய மூலக் காரணம் என்ன? அதனை எப்படி அனுகி தீர்வு காண்பது என்று அமைதியாக சிந்தித்து தீர்வு காண முயன்றால், இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்).

No comments:

Post a Comment