Thursday, April 1, 2010

அரைவேக்காடு

மூன்று மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காகச் செல்லும் வழியில் சிற்றுண்டி தாயாரிக்கும் பாட்டியிடம் தோசை கேட்டு வாங்கி சாப்பிட ஆரம்பித்தார்கள். ஒருவன் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தான், மற்ற இருவரும் கார சாரமாக தாம் படித்ததைப் பற்றி விவாதிதித்துக் கொண்டிருந்தனர். சாப்பிட்டுக் கிளம்பும்முன் பாட்டி, "எங்க போய்ட்டிருக்கிங்க தம்பி?" எனக் கேட்டாள். மூவரும் தேர்வு எழுத போய்க் கொண்டிருப்பதாக கூறினார்கள். அதற்கு பாட்டி "நீங்கள் இருவரும் தோல்வி அடைவீர்கள், மூன்றாமவன் வெற்றி பெருவான்", எனக் கூறினாள். பாட்டியை முறைத்துக் கொண்டே இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

தேர்வு முடிவுகள் பாட்டி கூறிய படியே அமைந்திருந்தது. இருவரும் அந்த பாட்டியிடம் சென்று "உங்களுக்கு முகசாஸ்திரம் தெரியுமா?" எனக் கேட்டார்கள். அதற்கு, எனக்கு தெரிந்ததெல்லாம், "வேகாத வடை சத்தம்மிட்டுக் கொண்டு அங்கும் இங்கும் ஓடும்; வெந்த வடை அமைதியாக இருக்கும்" என்றாள்.

No comments:

Post a Comment