Thursday, April 1, 2010

"கிறித்தவ மதத்தை மட்டும் ஏன் குறிப்பாக தாக்குகிறீர்கள் “

கிறித்தவ மதத்தை மட்டும் ஏன் குறிப்பாக தாக்குகிறீர்கள் “என்று கேட்கிறீர்கள் ,அதற்க்கு முக்கிய காரணம் ,நான் அவர்கள் மேல் வைத்திருக்கும் உண்மையான அன்புதான் .அவர் “அன்பே கடவுள் “என்றார் . அந்த அன்பு வடிவத்தையே நான் கடவுளாக காணுகிறேன் .அந்த யதார்த்தமான ,உண்மையான தைரியமான தன்னை யார் என்று உணர்த்துக் கொண்ட ஒரு குருவை .சிலுவையில் அறைந்து ,சிலையாக வடித்து அவர்பெயரில் ஒரு மதத்தை உண்டாக்கிக் கொண்டு பணத்தை வாரி இறைத்து ,கிறித்துவத்தையும் ,கிறித்துவ மதத்தையும் சரியாக புரிந்துக் கொள்ளாமலேயே ,இந்த உலகத்தில் பரப்புவது எந்த விதத்தில் நியாயம் ?
ஒன்று மட்டும் கூறிக் கொள்ளுகிறேன் .நான் எந்த மதத்தையும் சேராதவன் . எனக்கு என்று எந்த மதமும் கிடையாது , மதம் என்ற குறுகிய எல்லைக்குள் ,என்னை அடைத்துக் கொள்ள நான் ஒரு நாளும் விரும்ப மாடேன் .என்னுடைய மதம் மதமற்ற மதம்( Religion without any religion ) நான் எல்லா மதத்துக்கும் உடையவன் .நான் ஒரு உண்மையான கிருத்துவனை விட ,இந்துவை விட ,முகமதியரை விட ,ஜைனரை விட எந்தவிதத்திலும் குறைத்தவன் இல்லை .இதை முதலில் புரிந்துக்கொள்ளுங்கள் .ஆகவே எந்த ஒரு உண்மையான ,கிருஸ்துவை உண்மையாக புரிந்துக்கொண்ட யாருடைய மனத்தையும் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல .குறிக்கோளும் இல்லை .தேவையும் இல்லை .அப்படி அவர்களுடைய மனதை புண்படுத்தினால் ,என்னுடைய மனதையே ,நானே புண்படுத்தி கொள்வதற்கு சமம் .என்னை சரியாக புரிந்துக்கொள்ளுங்கள்.

ஒரு கேள்வி ஓராயிரம் கேள்விகளை உண்டுபண்ணும் .அது உண்மைதான் .இப்போது நம்மால் கிறிஸ்துவையும் ,கிறிஸ்துவ மதத்தையும் தாண்டி இன்னும் செல்ல முடியவில்லை .
ஆமாம் ,”நீங்கள் சொல்லுவது உண்மைதான் .இந்து மதத்தை தோண்ட தோண்ட ……!எதுவோ சொல்லுவார்கள் . அதற்க்கு இந்த புத்தகம் போதாது.இப்படி பல மதங்களில்
பல மூட நம்பிக்கைகள் ஊடுரிவி தான் இருக்கும் .நம்மவர்கள் கடவுளை நம்புங்கள் என்றுதான் அழுத்தமாக சொல்லி இருக்கிறார்கள் தவிர “கடவுளை அடையுங்கள்” “கடவுளை அறிந்துக் கொள்ளுங்கள் ” “கடவுளை உணர்ந்துக் கொள்ளுங்கள் “என்று சொல்லவில்லை .நீங்கள் ஒன்றை அறிந்திக் கொள்ளாத பொழுது ,உணர்த்துக் கொள்ளாத பொழுது தான் “நம்புதல் ” என்று வருகிறது .நம்புதலுக்கு அடித்தளம் மூடக்கொள்கை ,மற்றும் பொய் ,பயம் ,ஆசை இவை தான் .
அதை போலத்தான் ஜீசஸ் யை நம்புங்கள் என்று பிரச்சாரம் செய்கிறார்களேத் தவிர ஜீசஸ்யை உண்மையாக புரிந்துக் கொண்டு ,உணர்ந்துக் கொண்டு நம்புங்கள் என்று எந்த பாதிரிமாரும் பிரச்சாரம் செய்வது இல்லை .ஏன் என்றால் அவர்களே ஜீசஸ் யை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை .இதனால் , ” என்னை சாப்பிடுங்கள் ,என்னை குடியுங்கள் ” என்று ஜீசஸ் சொன்னதற்க்காக இன்றைக்கு ஆப்பத்தையும் ,ஓய்ன் என்ற மதுபானத்தையும் சாப்பிட்டுக் கொண்டு ஆனந்தமாக ஆடுகிறார்கள் .ஆகவே நம்புதல் என்பது ஒருவர் புரிந்துக் கொண்டதால் தானே வரவேண்டும் .தவிர வெறும் நம்பிக்கை மூடநம்பிக்கைகளை மட்டும் வளர்க்கும் .

ஓஷோவின் கருத்து

காமத்தைக் கடக்க காமத்தில் மூழ்கு.. காமத்தில் மூழ்காமல் மறுகரைக்கு செல்லவே முடியாது.

கியோடோவின் கவர்னர்

ஜப்பானின் பழைய தலைநகரம் கியோடோவில் இருந்த பெருமை வாய்ந்த ஐந்து ஸென் புத்த கோயிலில் ஒன்றான டொஃபூக்குவில் மெய்ஜி காலத்தில் வாழ்ந்த சிறந்த ஸென் ஆசிரியர் கெய்சூ, அந்த புத்த கோயிலின் தலைமை ஆசிரியராக இருந்தார்.

ஒரு நாள் கியோடோவின் கவர்னர் அந்த கோயிலுக்கு வருகை தந்தார். அவர் தன்னுடைய விசிட்டிங் கார்டை அங்கிருந்த உதவியாளரிடம் கொடுத்து கெய்சூவை பார்க்க வேண்டும் என்றார். அவர் கொடுத்த அட்டையில் "கிடகாகி - கியோடோவின் கவர்னர்" என்று இருந்தது.

உதவியாளர் கெய்சூவிடம் சென்று அந்த அட்டையைக் காண்பித்தார். வாங்கி அட்டையை படித்துப் பார்த்த கெய்சூ "எனக்கு இவரை முன்பின் தெரியாது. அவரை பார்க்க முடியாது என்று சொல்லி முதலில் வெளியே அனுப்பு" என்று கூறினார்.

உதவியாளர் கவர்னரிடம் தன்னால் உதவமுடியாததற்கு மன்னிக்கவும் என்று கூறி அவர் தந்த அட்டையை திருப்பிக் கொடுத்தார். "என்னுடைய தவறு" என்று கூறிய கவர்னர், தன்னுடைய அட்டையில் இருந்த "கியோடோவின் கவர்னர்" என்ற வார்த்தைகளை பென்சிலால் அடித்து விட்டு, "மறுபடியும் ஆசிரியரிடம் இந்த அட்டையைக் காண்பிக்கவும்" என்று கூறினார்.

அட்டையை படித்து பார்த்து விட்டு, "ஓ!! அது கிடகாகியா?" என்று கூறி வியந்த ஆசிரியர், "இப்பொழுதே அவரை நான் பார்க்க வேண்டும், உள்ளே அனுப்பு" என்று கூறினார்.

கதவில்லாத கோயில்

ஹைசயெமொன் ஒரு பணக்காரன். நல்ல படிப்பாளி, அறிவுக் கூர்மையானவன், ஆர்வமுடன் கலைகளை கற்பதில் தீராதக் காதல் கொண்டவன். அவன் முனிவர்களும், ஞானிகளும் கூறிய படி ஒழுக்கமுடன் வாழ்ந்து வந்தான். தன்னுடைய பொருளைக் கொண்டு ஏழை எளியவர்களுக்கு கொடுத்து உதவத் தயங்காதவன். ஆனாதைக் குழந்தைகளுக்கும், ஏழைக் குடும்பங்களுக்கும் தானே வலிய சென்று உதவி வந்தான். ஏழைகளுக்கு பயனாக இருக்க வேண்டும் என்று சாலைகளையும், பாலங்களையும் அமைத்துக் கொடுத்தான்.

தான் இறந்த போது கூட உயிலில் சொத்துக்களை தனது பையன்களும், பேரக் குழந்தைகளும் ஆண்டு அனுபவித்தாலும் ஏழைகளுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்று எழுதி வைத்திருந்தான்.

அவன் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றினை மக்கள் இன்றும் கூறுவார்கள். ஒரு நாள் ஹைசயெமொனுடைய வீட்டிற்கு புத்த பிட்சு ஒருவர் வந்தார். அந்த காலத்தில் வாழ்ந்த பணக்காரர்களில் இருந்து வேறு பட்டு இருந்த ஹைசயெமொனுடைய செல்வ செழிப்பையும், கருனை உள்ளத்துடன் கூடிய நல்ல குணத்தையும் அறிந்து வைத்திருந்தார். அவனைப் பார்த்து தன்னுடைய புத்த விகாரத்திற்கு கதவு இல்லாததால், கோயிலின் கதவினை செய்வதற்கு பொருளோ பணமோ கொடுத்து உதவுமாறு கோரினார்.

ஹைசயெமொன் புத்த பிட்சுவைப் பார்த்து சிரித்துவிட்டு "நான் எழைகளுக்கு உதவுகிறேன், ஏனென்றால் அவர்களுடைய வறுமையின் கஷ்டத்தைப் பார்த்து மனம் வலிக்கிறது, கதவில்லாத கோயிலினால் யாருக்கு என்ன கஷ்டம், அப்படி என்ன அந்த கதவு முக்கியமானது?" என்று கேட்டார்.

முயற்சியில்லாமல் வெற்றி பெறுவது

சுகஹாரா பொகுடென் சிறந்த போர் வீரர். அவர் ஆரம்பித்த தற்காப்பு போர்பயிற்சிக் கலைப் பள்ளியின் பெயர் "முயற்சியில்லாமல் வெற்றி பெறுவது". மிகவும் புகழ் பெற்ற இந்த கதை அந்த பள்ளியின் பெயரையும், அங்கு கற்று தந்த கல்வி முறையையும் சொல்லுகிறது.

ஒரு முறை கிழக்கு ஜப்பானுக்கு செல்லும் பொழுது பொகுடென் படகு ஒன்றில் ஐந்து அல்லது ஆறு பேர்களுடன் பயனிக்க வேண்டி இருந்தது. அதில் பயனித்த தடியனும் முரடனுமான ஒருவன் சத்தமாக தன்னுடைய வலிமையைப் பற்றியும் தற்காப்புக் கலையில் (Martial Arts) தானே சிறந்தவன் என்றும் எத்தனை பேரை தான் வென்று இருப்பதாகவும் தம்பட்டம் அடித்துக் கொண்டு இருந்தான். மற்றவர்கள் அனைவரும் மிகவும் அமைதியாக இருந்தனர். மேலும் மேலும் தன்னுடைய வலிமையைப் பற்றி சுய தம்பட்டம் அடித்துக் கடுப்பேற்றினான்.
பொருத்துப் பார்த்த பொகுடென் கடைசியாக பொறுமை இழந்து "நல்லது. நாங்கள் அனைவரும் உன்னிடமிருந்து பல வகையான கதைகளை கேட்டு அறிந்தோம், நானும் சிறு வயதிலிருந்து தற்காப்புக் கலைகளை கற்று அதில் கூறிய படி நடந்து வருகிறேன். ஆனால் ஒரு நாளும் யாரையும் தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்ததில்லை. எப்பொழுதும் எப்படி மற்றவர்களிடமிருந்து விழும் அடிகளிலிருந்து தப்பிப்பது என்றும் சண்டை என்று வந்தால் தோல்வியுறாமல் தற்காத்துக் கொள்வதுமே நான் பயின்றது" என்று அமைதியாக கூறினார்.

தன்னை எதிர்த்து பேசியதை பொருக்காத தடியன் "எந்த பள்ளியின் தற்காப்புக் கலையை பயின்று அதன் படி நடக்கிறாய்" என்று கேட்டான்.

பொகுடென் "முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறுவது (அ) தோற்காத வழி தேடுவதுதான் தான் பயின்ற பள்ளியின் பெயர்" என்று தயக்கமின்றி பதில் உரைத்தார்.

தடியன் "எதையும் முயற்சிக்காமலேயே வெற்றி பெறுவது என்றால் எதற்காக போர்வாளை உன்னுடைய இடையில் வைத்திருக்கிறாய்?" என்று கேட்டான்.

பொகுடென் "இரண்டு வாள்களான 'மனதை மனதால் தொடர்பு கொள்வது', 'கர்வத்தால் ஏற்படும் தற்பெருமையையும், கொடி போல வளரும் தீய எண்ணங்களையும்' வெட்டி எறியவே வைத்துள்ளேன்" என்று கூறினார்.
"அப்படியானால் போட்டிக்கு தயாரா, வா!, வந்து என்னுடன் சண்டையிடு, எப்படி முயலாமல் நீ வெற்றி பெறுகிறாய் என்று பார்த்து விடுகிறேன்" என முரடன் வீண் சண்டைக்கு அழைத்தான்.

பொகுடென் "இதுவரை எனது இதயமான வாள் வாழ்வை காப்பதற்கு தான் உபயோகப் பட்டது, ஆனால் இன்று எதிரி கெட்டவனாக இருப்பதால் வாழ்வை எடுக்கப் போகிறது" என்று சூளுரைத்தார்.
வீம்புக்காரன் மிகவும் ஆத்திரமடைந்து படகோட்டியை பார்த்து "இப்பொழுதே கரைக்கு ஓட்டு, இவனை ஒரு கை பார்த்து விடுகிறேன்" என்று குதித்தான்.

பொகுடென் இரகசியமாக படகோட்டியைப் பார்த்து கண் ஜாடை செய்து விட்டு, வீண் பெருமை பேசியவனைப் பார்த்து "படகை கரைக்கு ஓட்டுவது நல்லதல்ல, கரை படகுத்துரை ஆனதால் மக்கள் கூடும் இடம், போட்டியை அங்கு வைத்துக் கொள்ள வேண்டாம், நீ விருப்பப் பட்டால் நமக்கு முன்னால் கொஞ்சம் தூரத்தில் தீவு போல் தெரியும் மேட்டில் வைத்துக் கொள்ளலாம், படகில் இருப்பவர்கள் வீணாக நம்மால் நேரம் கடந்து செல்லத் தேவையில்லை" என்று கூறினார்.

படகோட்டி தீவுத் திடலுக்கு ஒட்டிச் சென்றான். தடியன் வேகமாக தீவில் குதித்து இறங்கி விட்டு "வா, இறங்கி வா!, உன் மண்டையை இரண்டாக பிளக்கிறேன்" என்று கத்திக் கொண்டே தன்னுடைய நீண்ட கத்தியை உரையிலிருந்து எடுத்தான்.
பொகுடென் "முயற்சியில்லாமல் வெல்வதற்கு முதலில் மனதை அமைதியடைய செய்ய வேண்டும், எனக்கு ஒரு நிமிடம் கொடு" என்று கூறி தன்னுடைய வாளை உருவி படகோட்டியிடம் கொடுத்து விட்டு அதற்கு பதிலாக துடுப்பை வாங்கிக் கொண்டார்.

பார்ப்பதற்கு பொகுடென் துடுப்பால் படகை நகர்த்தி கரைக்கு செல்வது போல் இருந்தது, ஆனால் வேகமாக படகை தண்ணீரில் இழுத்து துடுப்பைக் கொண்டு வேகமாக எதிர் திசையை நோக்கி படகை செலுத்த ஆரம்பித்தார்.
அதைப் பார்த்த ஜம்பவான், "எதற்கு நீ கரைக்கு வரவேண்டியது தானே?" என்று கத்தினான்.

பொகுடென் சிரித்துக் கொண்டே "எதற்காக! உனக்கு தேவையென்றால் நீந்தி இங்கே வா, நான் தரைக்கு எப்படி போவதென பாடம் எடுக்கிறேன், இதுதான் நான் கற்ற முயலாமல் வெற்றி பெறுவதன் பாடம்" என்று கூறி விட்டு தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை நோக்கி துடுப்பை போடலானார்.

முதல் கல்

ஒரு சமயம் ஸென் குரு டைரியோவை விருந்து ஒன்றிற்கு அந்த ஊரில் இருந்த பல வீடுகளுக்கு சொந்தக் காரனான பணக்காரர் ஒருவர் அழைத்து இருந்தார். மற்ற புத்த துறவிகளும் அங்கு வந்திருந்தனர்.

அந்த பணக்கார வீட்டில் இருந்த சமையல்காரன் நகைச்சுவையுடன் துறவிகளிடம் விளையாடி பார்த்து விடுவது என முடிவெடுத்து, சுறாவினை கழுவி, நன்றாக வெட்டி, பதமாக சுறாப் புட்டு செய்து வைத்திருந்தான். மீன்கறியை புத்த துறவிகளோ (அ) ஆசிரியர்களோ தொடுவது கூட விரும்ப தகாத காரியமாக கருதப் பட்டது.

மற்ற எல்லா துறவிகளும் மீன்கறியினை நீக்கிவிட்டு மற்ற காய்கறிகளை மட்டுமே உண்டனர். ஆனால் அது என்ன என்று தெரியாதவரைப்போல டைரியோவோ கொஞ்சமும் வைக்காமல் சுறாபிட்டினை ஒரு பிடி பிடித்தார்.

அருகில் இருந்த ஒரு துறவி டைரியோவின் சட்டைக் கைப் பகுதியை மெதுவாக யாருக்கும் தெரியாமல் இழுத்து, "அது, மீன் கறி" என்று இரகசியமாக சொன்னார். டைரியோவோ அந்த துறவியின் கண்களைப் பார்த்து தயக்கமின்றி சாதுர்யமாக "அது சரி, உனக்கு எப்படித் தெரியும் அது மீன்கறி என்று?" பதிலுரைத்தார்

அரைவேக்காடு

மூன்று மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காகச் செல்லும் வழியில் சிற்றுண்டி தாயாரிக்கும் பாட்டியிடம் தோசை கேட்டு வாங்கி சாப்பிட ஆரம்பித்தார்கள். ஒருவன் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தான், மற்ற இருவரும் கார சாரமாக தாம் படித்ததைப் பற்றி விவாதிதித்துக் கொண்டிருந்தனர். சாப்பிட்டுக் கிளம்பும்முன் பாட்டி, "எங்க போய்ட்டிருக்கிங்க தம்பி?" எனக் கேட்டாள். மூவரும் தேர்வு எழுத போய்க் கொண்டிருப்பதாக கூறினார்கள். அதற்கு பாட்டி "நீங்கள் இருவரும் தோல்வி அடைவீர்கள், மூன்றாமவன் வெற்றி பெருவான்", எனக் கூறினாள். பாட்டியை முறைத்துக் கொண்டே இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

தேர்வு முடிவுகள் பாட்டி கூறிய படியே அமைந்திருந்தது. இருவரும் அந்த பாட்டியிடம் சென்று "உங்களுக்கு முகசாஸ்திரம் தெரியுமா?" எனக் கேட்டார்கள். அதற்கு, எனக்கு தெரிந்ததெல்லாம், "வேகாத வடை சத்தம்மிட்டுக் கொண்டு அங்கும் இங்கும் ஓடும்; வெந்த வடை அமைதியாக இருக்கும்" என்றாள்.