Thursday, April 1, 2010

சொற்கள் இல்லாத வார்த்தை

இது ஒரு கோஆன்-KOAN (ஞான நெறியை போதிக்கும்) வகையைச் சார்ந்த கதை.

ஒரு தத்துவஞானி புத்தரைப் பார்த்து "வார்த்தைகளை உபயோகிக்காமலும், பேசாமலும், உங்களால் உண்மையை கூற முடியுமா?" என்று கேட்டார்.
புத்தர் மவுனமாக இருந்தார்.
தத்துவஞானி புத்தரை நோக்கி, "உங்களுடைய கருனை மிகுந்த அன்பினால் என்னுடைய மாயை தெளிந்து உண்மையான வழியை அரிய முடிந்தது", என்று வணங்கி நன்றி கூறி விடை பெற்றுச் சென்றார்.
அவர் சென்றபின் புத்தரின் சீடர் ஆனந்தா, "அந்த தத்துவஞானி எப்படி விரைவாக உணர்ந்து கொண்டார்" என்று கேட்டார்.
புத்தர் அதற்கு, "நல்ல குதிரை சாட்டையின் நிழல் பட்டால் கூட ஒடும்", என்று பதில் அளித்தார்.

No comments:

Post a Comment