Thursday, April 1, 2010

புலியா எலியா?

ஒரு நாள் பொட்டல் காடு வழியாக ஒருவன் சென்று கொண்டிருந்த போது திடிரென கொடிய புலி ஒன்று துறத்த ஆரம்பித்தது. அவன் ஒடினான், ஆனால் ஒடுவதற்கு மேலும் வழி இல்லாமல் செங்குத்தான மலைப் பாறை முடிவுக்கு வந்ததால், அதில் இருந்த கொடி ஒன்றினைப் பிடித்துக் கொண்டு கிழே இறங்க ஆரம்பித்தான். அவன் கஷ்டப் பட்டு தொங்கிக் கொண்டு இருந்த போது கொஞ்சம் தூரத்தின் மேல் இருந்த பாறையின் துளையில் இருந்து வெளிவந்த இரண்டு சுண்டெலிகள் அந்த கொடியினை கொஞ்சம் கொஞ்சமாக கூரிய பற்களால் கடிக்க ஆரம்பித்தன. கிழே விழுந்தால் உயிர் தப்புவது கடினம், மேலே புலி உறுமிக் கொண்டு காத்திருக்கிறது. அப்போது தான் பற்றி வந்த கொடியில் கைக்கு எட்டும் தொலைவில் நன்றாக பழுத்த காட்டு ஸ்ட்ராபெரி பழத்தை பார்த்தான். பறித்தான், ருசித்தான். என்ன அருமையான சுவை.

No comments:

Post a Comment