Thursday, April 1, 2010

கதவில்லாத கோயில்

ஹைசயெமொன் ஒரு பணக்காரன். நல்ல படிப்பாளி, அறிவுக் கூர்மையானவன், ஆர்வமுடன் கலைகளை கற்பதில் தீராதக் காதல் கொண்டவன். அவன் முனிவர்களும், ஞானிகளும் கூறிய படி ஒழுக்கமுடன் வாழ்ந்து வந்தான். தன்னுடைய பொருளைக் கொண்டு ஏழை எளியவர்களுக்கு கொடுத்து உதவத் தயங்காதவன். ஆனாதைக் குழந்தைகளுக்கும், ஏழைக் குடும்பங்களுக்கும் தானே வலிய சென்று உதவி வந்தான். ஏழைகளுக்கு பயனாக இருக்க வேண்டும் என்று சாலைகளையும், பாலங்களையும் அமைத்துக் கொடுத்தான்.

தான் இறந்த போது கூட உயிலில் சொத்துக்களை தனது பையன்களும், பேரக் குழந்தைகளும் ஆண்டு அனுபவித்தாலும் ஏழைகளுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்று எழுதி வைத்திருந்தான்.

அவன் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றினை மக்கள் இன்றும் கூறுவார்கள். ஒரு நாள் ஹைசயெமொனுடைய வீட்டிற்கு புத்த பிட்சு ஒருவர் வந்தார். அந்த காலத்தில் வாழ்ந்த பணக்காரர்களில் இருந்து வேறு பட்டு இருந்த ஹைசயெமொனுடைய செல்வ செழிப்பையும், கருனை உள்ளத்துடன் கூடிய நல்ல குணத்தையும் அறிந்து வைத்திருந்தார். அவனைப் பார்த்து தன்னுடைய புத்த விகாரத்திற்கு கதவு இல்லாததால், கோயிலின் கதவினை செய்வதற்கு பொருளோ பணமோ கொடுத்து உதவுமாறு கோரினார்.

ஹைசயெமொன் புத்த பிட்சுவைப் பார்த்து சிரித்துவிட்டு "நான் எழைகளுக்கு உதவுகிறேன், ஏனென்றால் அவர்களுடைய வறுமையின் கஷ்டத்தைப் பார்த்து மனம் வலிக்கிறது, கதவில்லாத கோயிலினால் யாருக்கு என்ன கஷ்டம், அப்படி என்ன அந்த கதவு முக்கியமானது?" என்று கேட்டார்.

No comments:

Post a Comment