ஜப்பானின் பழைய தலைநகரம் கியோடோவில் இருந்த பெருமை வாய்ந்த ஐந்து ஸென் புத்த கோயிலில் ஒன்றான டொஃபூக்குவில் மெய்ஜி காலத்தில் வாழ்ந்த சிறந்த ஸென் ஆசிரியர் கெய்சூ, அந்த புத்த கோயிலின் தலைமை ஆசிரியராக இருந்தார்.
ஒரு நாள் கியோடோவின் கவர்னர் அந்த கோயிலுக்கு வருகை தந்தார். அவர் தன்னுடைய விசிட்டிங் கார்டை அங்கிருந்த உதவியாளரிடம் கொடுத்து கெய்சூவை பார்க்க வேண்டும் என்றார். அவர் கொடுத்த அட்டையில் "கிடகாகி - கியோடோவின் கவர்னர்" என்று இருந்தது.
உதவியாளர் கெய்சூவிடம் சென்று அந்த அட்டையைக் காண்பித்தார். வாங்கி அட்டையை படித்துப் பார்த்த கெய்சூ "எனக்கு இவரை முன்பின் தெரியாது. அவரை பார்க்க முடியாது என்று சொல்லி முதலில் வெளியே அனுப்பு" என்று கூறினார்.
உதவியாளர் கவர்னரிடம் தன்னால் உதவமுடியாததற்கு மன்னிக்கவும் என்று கூறி அவர் தந்த அட்டையை திருப்பிக் கொடுத்தார். "என்னுடைய தவறு" என்று கூறிய கவர்னர், தன்னுடைய அட்டையில் இருந்த "கியோடோவின் கவர்னர்" என்ற வார்த்தைகளை பென்சிலால் அடித்து விட்டு, "மறுபடியும் ஆசிரியரிடம் இந்த அட்டையைக் காண்பிக்கவும்" என்று கூறினார்.
அட்டையை படித்து பார்த்து விட்டு, "ஓ!! அது கிடகாகியா?" என்று கூறி வியந்த ஆசிரியர், "இப்பொழுதே அவரை நான் பார்க்க வேண்டும், உள்ளே அனுப்பு" என்று கூறினார்.
Showing posts with label Apr01. Show all posts
Showing posts with label Apr01. Show all posts
Thursday, April 1, 2010
Subscribe to:
Posts (Atom)
