ஒரு ஸென் மடத்தின் தலைமைக் குருவும் அவருடைய சீடர்களும் மாலை நேர தியானம் செய்வது வழக்கம். அந்த மடத்திலிருந்த குட்டி பூனை, அவர்கள் தியானம் செய்யும் போது அங்கும் இங்கும் உலாவுவதும், அடிக்கடி ஏப்ப மிட்டவாறும் இருந்தது. சீடர்கள் அடிக்கடி தியானத்தை விட்டு கலைவதும், பூனையின் சேட்டைகளை காண்பதாகவும் இருந்தனர். இதைக் கண்ட தலைமைக் குரு, ஒரு சிடனை அழைத்து, தினமும் மாலை நேர தியானத்திற்கு முன்பு, அந்த பூனையை பிடித்து ஒரிடத்தில் கட்டி போடுமாறு கூறினார். தினசரி தியானம் செல்வதற்கு முன்பு அந்த பூனை கட்டி போடப் பட்டது. சில வருடங்களுக்கு பிறகு தலைமைக் குரு இறந்தார். அதற்கு சில வருடங்களுக்கு பிறகு அந்த பூனையும் வயதானாதால் இறந்தது.
பூனை இறந்த மறுநாளே மற்றொறு பூனை கொண்டு வரப் பட்டு கட்டி போடப் பட்டது. அதுவே பழக்கமாகி ஒரு பூனை இறந்ததும் அடுத்த பூனை கொண்டு வரப்பட்டு ஆண்டாண்டு காலங்களாய் தொடரப் பட்டது. பின்னர் வந்த சில ஸென் புத்த பிட்சுகள் பவித்தரமான பூனையை பற்றியும் அதணால் தியானத்திற்கு ஏற்படும் முக்கிய நன்மைகளை பற்றியும் பிரசாங்கமும் நூல்களும் எழுத ஆரம்பித்தனர்.
Showing posts with label Mar22. Show all posts
Showing posts with label Mar22. Show all posts
Thursday, April 1, 2010
Subscribe to:
Posts (Atom)
