Showing posts with label Mar27. Show all posts
Showing posts with label Mar27. Show all posts

Thursday, April 1, 2010

வைரசூத்திரம்

ஒரு புத்ததுறவி "வைரசூத்திரம்" என்ற அரிய விலைமதிப்பில்லாத புத்தகத்தை எங்கு சென்றாலும் எடுத்து செல்வார். அவர் இருந்த ஊரில் அவரிடம் மட்டுமே அந்த புத்தகம் இருந்தது. அதனால் அந்த புத்தகத்திலிருந்து அவர் கூறும் கருத்துக்களை மற்ற துறவிகள் மட்டும் அல்லாது அறிஞர்களும், மற்ற சாதரணமான மக்களும் கேட்டு அறிந்தனர். ஒரு நாள் அந்த புத்ததுறவி பக்கத்து ஊருக்கு ஒரு மலையின் வழியாக ஏறி சென்று கொண்டிருந்தார். மிகுந்த பசி களைப்பினால் அங்கு சிற்றுண்டி விற்றுக் கொண்டிருந்த பாட்டியிடம், "அம்மா!, என்னிடம் பணம் இல்லை, ஆனால் சிறந்த களஞ்சியமான வைரசூத்திரம் உள்ளது. நீங்கள் எனக்குப் பசியாற சிற்றுண்டி அளித்தாள், அதிலிருந்து சிறந்த கருத்துக்களை எடுத்துக் கூறுகின்றேன்" என்றார். அதற்கு வைரசூத்திரம் பற்றி கேட்டு அறிந்திருந்த அவள், "நான் கேட்கும் எளிய கேள்விக்கு விடை அளித்தாள், உங்களுக்கு சுடச்சுட பருக தேனிரும், சாப்பிட இட்லியும் தருகிறேன்" என்றாள். அவரும் சரியென்று கூறினார். நீங்கள் நான் கொடுக்கும் உணவை, "இறந்த கால மனநிலையுடன் சாப்பிடுவிர்களா, நிகழ்கால மனநிலையுடன் சாப்பிடுவிர்களா, அல்லது எதிர்கால மனநிலையுடன் சாப்பிடுவிர்களா?" எனக் கேட்டாள்.

பதில் தெரியாத துறவியும், வைரசூத்திரத்தை எடுத்துப் பிரித்து அலசி ஆராய்ந்து பதில் தேடிக் கொண்டிருந்தார். வெகுநேரமாகியும் பதில் சொல்லாததால், விற்று முடித்த பாட்டி, சாமன்களை எல்லாம் எடுத்து மூட்டைக் கட்டி விட்டு, "நீ ஒரு முட்டாள்" என்று கூறி தர்மசங்கடத்தில் துறவியை ஆழ்த்தி விட்டு, "இங்கு வைத்திருக்கும் தேனிர் மற்றும் இட்லியை உன் வாயினால் சாப்பிடு" என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.