ஒரு சமயம் ஸென் குரு டைரியோவை விருந்து ஒன்றிற்கு அந்த ஊரில் இருந்த பல வீடுகளுக்கு சொந்தக் காரனான பணக்காரர் ஒருவர் அழைத்து இருந்தார். மற்ற புத்த துறவிகளும் அங்கு வந்திருந்தனர்.
அந்த பணக்கார வீட்டில் இருந்த சமையல்காரன் நகைச்சுவையுடன் துறவிகளிடம் விளையாடி பார்த்து விடுவது என முடிவெடுத்து, சுறாவினை கழுவி, நன்றாக வெட்டி, பதமாக சுறாப் புட்டு செய்து வைத்திருந்தான். மீன்கறியை புத்த துறவிகளோ (அ) ஆசிரியர்களோ தொடுவது கூட விரும்ப தகாத காரியமாக கருதப் பட்டது.
மற்ற எல்லா துறவிகளும் மீன்கறியினை நீக்கிவிட்டு மற்ற காய்கறிகளை மட்டுமே உண்டனர். ஆனால் அது என்ன என்று தெரியாதவரைப்போல டைரியோவோ கொஞ்சமும் வைக்காமல் சுறாபிட்டினை ஒரு பிடி பிடித்தார்.
அருகில் இருந்த ஒரு துறவி டைரியோவின் சட்டைக் கைப் பகுதியை மெதுவாக யாருக்கும் தெரியாமல் இழுத்து, "அது, மீன் கறி" என்று இரகசியமாக சொன்னார். டைரியோவோ அந்த துறவியின் கண்களைப் பார்த்து தயக்கமின்றி சாதுர்யமாக "அது சரி, உனக்கு எப்படித் தெரியும் அது மீன்கறி என்று?" பதிலுரைத்தார்
Showing posts with label Mar29. Show all posts
Showing posts with label Mar29. Show all posts
Thursday, April 1, 2010
Subscribe to:
Posts (Atom)
